×

திருப்பத்தூரில் தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்

*எஸ்பி அலுவலகத்தில் மனைவி புகார் மனு

ஜோலார்பேட்டை : திருப்பத்தூரில் தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என மனைவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் பேட்டை நியூ காலனி பகுதியில் வசித்து வரும் உதய சூரியன் (எ)செல்வராஜ். இவரது மனைவி சவுந்தரியா(எ)பிரியா(32). 3 பெண் குழந்தைகள் உள்ளது. மேலும் உதயசூரியன் கடந்த 10 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநராக தூயநெஞ்சக்கல்லூரி எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டேன்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.

மேலும் சவுந்தரியாவில் கணவர் உதியசூரியன் கடந்த 4ம் தேதி அன்று மாலை குரும்பகேரி புதூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் கூறிஉள்ளனர். பின்னர் இவரது மனைவி சென்று பார்க்கும்போது பித்துபிடித்தவர் போல் மனநிலையில் இருந்துள்ளார். மதுபோதையில் இருப்பதாக கருதி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். தலையில் பலமாக அடிபட்டுள்ளதாலும் அவர் கூச்சலிடவும் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் மறுநாள் பேச்சு மூச்சி இல்லாமல் இருந்துள்ளார்.

அதனால் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரின் உடலை கடந்த 6ம் தேதி அடக்கம் செய்தனர். பின்னர் 2 நாட்கள் கழித்து அவரது மனைவி ஞானசவுந்தரி நேற்று மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

திருப்பதி என்பவர் கறிவிருந்து வைப்பதற்காக அழைத்து சென்றதாகவும், அவருடன் சசி சென்றதாகவும், உதயசூரியன் ₹60 ஆயிரம் வைத்திருந்ததாகவும், பணத்திற்காக கணவரை கொலை செய்திருக்கலாம் என்றும் ஏற்கெனவே திருப்பதிக்கும் உதய சூரியனுக்கும் பகை இருந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என இவ்வாறு அவரது மனுவில் தெரிவித்துள்ளார்.

The post திருப்பத்தூரில் தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Jolarpet ,Tiruppathur ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி...